தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஷ்ருதிஹாசன் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘வீரசிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியுடன் ‘வால்டேர் வீரையா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் ‘சலார்’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், “சினிமாவில் எத்தனை உடைகளை மாற்றினாலும் எந்த விதமான உடை அணிந்தாலும் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் என் மனதுக்குப் பிடித்ததுபோல மட்டும்தான் வாழ்வேன்.
“வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களுக்குப் பிடித்ததுபோல வாழ்வது. அனைவருக்கும் பிடித்தது போல உடை அணிவது, பேசுவது, நடந்துகொள்வது மிகவும் கடினமான வேலை. ஏனென்றால் அடுத்தவர்கள் நம்மை எப்படி ஆமோதிக்கிறார்கள் என்பது அடிக்கடி மாறிவிடும். அது மிகவும் ஆபத்தானது.
“அதனால்தான் அனைவரையும் திருப்திப் படுத்தவேண்டும் என்று நினைக்காமல், மனதுக்கு மகிழ்ச்சி எதுவோ அப்படியே இருந்துகொள்வது, நடந்துகொள்வது மிகவும் முக்கியம். நான் எப்பொழுதும் அப்படி வாழ்வதற்குத்தான் விரும்புவேன்,” என்றார் ஷ்ருதிஹாசன்.
இவர் நடித்திருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’, ‘வால்டேர் வீரையா’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.