கேரளா

காசர்கோடு: மாதிரி வாக்குப்பதிவின்போது குறைந்தது நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: மது அருந்திவிட்டு வேலைக்கு வந்த 100 பேர்மீது கேரள அரசுப் போக்குவரத்துத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1,373 பேர் டெங்கி காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
திருவனந்தபுரம்: மக்களவைத் தேர்தலில் தமது மகன் தோற்க வேண்டும் என்று முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி தெரிவித்து உள்ளார்.