நிலநடுக்கம்

மராகேஷ்: அண்மையில் மொரோக்கோவை மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவில் அது 6.8ஆகப் பதிவானது.
மொரோக்கோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த 6.8 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கத்தில் 2,800 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் உள்ள மொரோக்கோ நாட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
மராகேஷ்: மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது இரவைப் பல குடும்பங்கள் பொதுவெளியில் கழித்தன.
டஃபெகாட்டே: மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான நிலநடுக்கத்துக்கு உள்ளான மொரோக்கோவில் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க 50,000 அமெரிக்க டாலர் (S$68,000) உதவி வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உறுதியளித்துள்ளது. மொரோக்கோ செஞ்சிலுவைச் சங்கத்துக்குக் கைகொடுப்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.