வரவுசெலவுத் திட்டம்

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்காக (பிடிஓ) காத்திருக்கும் தகுதிபெறும் குடும்பங்கள் பொதுச் சந்தையில் கிடைக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு அல்லது அறைக்கான வாடகைக் கட்டணத்தை ஈடுசெய்ய, விரைவில் மாதம் $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டைப் பயன்படுத்தமுடியும்.
கூடுதல் தேவைகளுடையோர், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் உதவி அவர்கள் செலுத்தும் வரிகளைக் காட்டிலும் அதிகம் என்பதை சிங்கப்பூரின் நியாயமான, முற்போக்குடைய நிதி அமைப்புமுறை உறுதிப்படுத்துவதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மத்திய சேமநிதியில் (மசேநி) 55 வயதையும் தாண்டியோரின் சிறப்புக் கணக்குகளை மூடி, வழங்கப்படும் வட்டித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின் எண்ணம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (28 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிட்ட $131.4 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்திற்கான ஆதரவு முழுமையாக இருந்தபோதும், மத்திய சேமநிதி சிறப்புக் கணக்கு மூடப்படுவது, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் போன்றவை தொடர்பான சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்து திங்கட்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
ஐம்பத்தைந்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மத்திய சேம நிதி உறுப்பினர்களின் சிறப்புக் கணக்கை மூடுவதற்குப் பதிலாக ஏற்கெனவே 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்தவர்களுக்கு அப்படியே மூடாமல் வைத்திருப்பது நியாயமாக இருக்கும் என்று பிப்ரவரி 26ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ஃபூ மி ஹார் யோசனைத் தெரிவித்தார்.