பொருளியல்

புதுடெல்லி: இந்தியப் பொருளியல் வரும் 2047ஆம் ஆண்டு வரை 8 விழுக்காடு வளா்ச்சி அடைய முடியும் என்று அனைத்துலக பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வேங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை அரசால் மட்டும் தீர்க்க முடியாது என்று இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிரமப்படும் ஊழியர்களுக்கு உதவும் விதமாக, குறைந்தபட்ச ஊதியத்தை 40% உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை, பிப்ரவரி மாதம் ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்று மார்ச் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவு தெரிவிக்கிறது.
வளர்ச்சி கண்டு வரும் சிங்கப்பூர் பொருளியலால் புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகள், 2023ஆம் ஆண்டின் அனைத்து காலியிடங்களிலும் 47.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.