சிங்கம்

கோல்கத்தா: ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, அவற்றுக்கு வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக இந்தியாவின் திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு பணியிடைநீக்கம் செய்தது. சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைக்க கூடாது என இந்துத்துவ அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் அக்பர், சீதா சிங்கங்களுக்கு வேறு பெயர் சூட்டும்படி கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நைஜீரியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்குப் பராமரிப்பாளர் ஒருவரை, கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக அவர் வளர்த்த ஒரு சிங்கமே கொன்றது.
சிறு வயதில் சிங்க நடனத்தின்மீது எழுந்த ஆர்வம் இன்று 11 ஆண்டுகள் கழித்தும் 23 வயதாகும் பிரின்ஸ் ஷானுக்கு சற்றும் குறையவில்லை.