துப்பாக்கிச்சூடு

இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் வெளியான செய்தியறிக்கையில், “தயவுசெய்து நமது பிரதமருக்கும் அதையே செய்யுங்கள்,” என்று பதிவிட்டார் 46 வயது ஆடவர் ஒருவர்.
லாஸ் ஏஞ்சலிஸ்: குடும்ப உறுப்பினர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுவனை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில், நிழலுலக குண்டர் கும்பல் தலைவரும் சரக்கு வாகனக் கட்டமைப்பின் உரிமையாளருமான அமீர் பலாஜ் திப்பு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை பிப்ரவரி 19ஆம் தேதியன்று தெரிவித்தது.