தமிழ் நாடு

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டுச் சேரும் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்டுள்ளன. இதுதவிர விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் திங்கட்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
சேலம்: தெற்கில் விடியல் பிறந்தது. அதுபோல இந்தியா முழுவதும் விரைவில் விடியல் பிறக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: கோடநாடு தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் சசிகலா நடராஜன் அறிவித்துள்ளார்.