மாணவர் சேர்க்கை

உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு, தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான கூட்டு மாணவர் சேர்க்கை முடிவுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
குதூகலம், கலக்கம், மகிழ்ச்சி என பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக, மனத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க பள்ளியின் முதல் நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர் தொடக்கநிலை ஒன்று, இரண்டு, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்.
சிங்கப்பூரின் உயர்நிலைக் கல்வியில் அடுத்த ஆண்டு முதல் இடம்பெறவிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்துக்காக இவ்வாண்டு இறுதியாண்டுத் தேர்வு எழுதிய தொடக்கநிலை 6 மாணவர்கள் முதல்முறையாக மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாலர் பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை தேசிய சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தபோதும் கடந்த ஆண்டுகளைவிடக் கூடியிருக்கிறது.