நோன்புப் பெருநாள்

இன, சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது செட்டியார் கோவில் சங்கம்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தை வரவேற்க சுல்தான் பள்ளிவாசலில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) காலை ஏறக்குறைய 9,000 பேர் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
பெட்டாலிங் ஜெயா: கடந்த 2022ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தன் மகன்களில் ஒருவரைப் பறிகொடுத்ததால் இதயம் நொறுங்கிப் போனார் மலாக்காவைச் சேர்ந்த ஒரு தாய்.
தோ பாயோ லோரோங் ஏழில் திருவாட்டி ஹமீத் ரஹ்மத்து நாட்சியார், 89, சொந்த வீட்டில் வசித்துவந்தாலும் அடிக்கடி தன்னை வந்து பார்க்கும் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் இன்முகத்துடன் வரவேற்பார். சிரித்துப் பேசி, பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்து இவர் இன்புறுவார்.
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு காலத்துக்குப் பிறகும் பரிவு, பங்களிப்பு, அறப்பணி போன்ற உணர்வுகளை தொடர்ந்து பேண வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.