பாட்டாளிக் கட்சி

அரசாங்கம் தனது இப்போதைய ஆட்சிக் காலத்தில் சங்கடமான விவகாரங்களைக் கையாள வேண்டிய நிலை ஏற்படும்போது அவற்றை சிங்கப்பூரர்களிடம் தெளிவுபடுத்துவதில் மெதுவாக செயல்படுகிறது அல்லது போதிய அளவுக்கு நேரடியாகச் செயல்படுவதில்லை என்று எதிர்த்தரப்பு தலைவர் பிரித்தம் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா கொண்டிருந்த ஒரு தகாத தொடர்பு பற்றி அவருடைய வாகன ஓட்டுநரிடம் இருந்து செய்தி கிடைத்ததை அடுத்து அந்த ஓட்டுநரை விசாரிப்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் அழைக்கவில்லை.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் தனது குடியிருப்பாளர், வாடகைதாரர்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணத்தை அடுத்த ஓராண்டுக்குள் இரண்டு முறை உயர்த்துகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் முறை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான ஃபைசல் மனாப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வெள்ளிக்கிழமை, பாட்டாளிக் கட்சி ஃபேஸ்புக்கில் அதனைத் தெரிவித்தது.
பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதால் அவருக்குப் பதில், கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய செயற்குழு உறுப்பினருமான திரு பிங் எங் ஹுவாட் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்கிறார்.