மசெக

2020 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தொகுதிகளில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மக்கள் செயல் கட்சியைச் (மசெக) சேர்ந்த அடித்தளத் தலைவர்கள் அதிகரித்துள்ளனர்.
உலகின் மற்ற பகுதிகளுடனான சிங்கப்பூரின் ஈடுபாட்டைக் கையாள, 4ஆம் தலைமுறைத் தலைமைத்துவம் நாட்டை முக்கிய பங்காளிகளுக்கு பொருத்தமானதாக்குவதற்கும் ஆதரவுக் கூட்டணியைத் திரட்டுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்.
சிங்கப்பூரின் சிறந்த அரசாங்கச் சேவை காரணமாக அனுபவமிக்க அல்லது திறமையான அமைச்சர் தேவையில்லை என்ற வாதம் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் முற்போக்குடனும் நீடிக்க பன்முகத்தன்மையை வரவேற்பது, அனைவரையும் உள்ளடக்கியவாறு செயல்படுவது, ஒன்றிணைந்து முடிவெடுப்பது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அக்கட்சியின் ஜூரோங் ஸ்பிரிங் பிரிவு உதவி கிளைச் செயலாளர் டாக்டர் ஹமீத் ரஸாக், 38, கூறினார். 
அடுத்த பணியை ஏற்கத் தயார் என்று கூறியுள்ள துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், எதிர்க்கட்சிகளிடமிருந்து மக்கள் செயல் கட்சியின் கொள்கைகள் வேறுபட்டிருப்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.