வேலை

புதுடெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 விழுக்காடு உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்குக் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னேற்றம் கண்டுள்ளது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
நியூயார்க் : பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்த பிறகு, ஏறக்குறைய ஒன்பது விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது.