விஜயகாந்த்

விருதுநகர்: “வரும் 2026ஆம் ஆண்டில் அதிமுக, -தேமுதிக, ஆட்சி அமைய வேண்டும். பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
சென்னை: காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அவரது நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான பிப்ரவரி 13ஆம் தேதி, தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது காலம் கடந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.