சிங்கப்பூர்

பிரதமர் லீ சியன் லூங் 2004ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து, முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு ஏறத்தாழ 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.
பணி தொடர்பான இணையவாசலைப் பயன்படுத்தி, அனுமதியின்றி 34 கைதிகளின் விவரங்களைச் சோதித்ததாகச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் பிரதமராக இருந்துவரும் திரு லீ சியன் லூங், 2024 மே 15ஆம் தேதியன்று அப்பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளார். தம்முடைய பதவிக்காலத்தின்போது திரு லீ, இந்தியச் சமூகத்திற்குப் பேராதரவாக, பெருந்துணையாக விளங்கி வந்துள்ளது குறித்தும் அவரது நிர்வாகத் திறன், தலைமைத்துவம் குறித்தும் இளையோர் முதல் பெரியோர்வரை பலரும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூர் படகோட்ட வீராங்கனையான சாயிடா அய்சியா இரண்டாவது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றுள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளாக, தாம் பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துறவாடியபோதெல்லாம், அவரது கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதுதான் இருந்தது எனப் புரிந்துகொண்டேன் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.