தமிழர்

பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 
அதிரடியான மாற்றங்களுக்கு உள்ளாகும் உலகச் சூழலில் சிங்கப்பூர், ஜெர்மனியுடனான தனது நீடித்த உறவைப் பெரிதும் மதிப்பதாக சிங்கப்பூரின் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
எல்லா நன்மைகளும் பெற்றிருக்கும் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.
தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வீரத்தின் ஓர் அடையாளமான ‘சிலம்பம்’ தற்காப்புக் கலைப் பயிலரங்கு கடந்த மார்ச் 31ஆம் நாள், சிராங்கூனில் உள்ள களரி அகாடமி பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் (லிஷா) சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் இணைந்து சனிக்கிழமையன்று (ஜனவரி 20) தேக்கா பகுதியில் கோலாகலமாகக் கூட்டுப் பொங்கல் விழாவை நடத்தின.