பயங்கரவாதம்

சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயத்தில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் தேவாலயத்தின் பேராயர் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த முயற்சி செய்துவிட்டு பாகிஸ்தானுக்குத் தப்பியோடி அங்கு பதுங்கிகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாக இருக்கலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தால் அது மிகவும் தவறு என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏபர்ல் 5ஆம் தேதி சிஎன்என் நியூஸ் 18 ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மாஸ்கோ தாக்குதல் போல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனீசியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ: அண்மையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
பாரிஸ்: பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலையை பிரான்ஸ் ஆக உயர்நிலைக்கு உயர்த்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டல் மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார்.