லஞ்சம்

மதுரை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு என ஏதேனும் ஒருவகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சில்லறை நிர்வாக நிறுவனத்தில் சேமிப்புக் கிடங்கு (ஸ்டோர்) திட்ட நிர்வாகியாகப் பணியாற்றிய முஹமட் ஃபவுஸி அப்துல் ரஹிமானுக்கு $506,000க்கு மேல் லஞ்சம் பெற்றதால் மார்ச் 14ஆம் தேதி 64 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் நிதியமைச்சர் தயிம் ஸைனுதீன், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் மகன்கள் இருவர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்திவந்த ஊழல் ஒழிப்புப் பிரிவு தற்போது அதன் கவனத்தை வேறுபக்கம் திருப்பியுள்ளது.
பெய்ஜிங்: லஞ்சமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு ஓய்வுபெற்ற சீன அதிகாரி ஒருவர் 13 வீடுகளை வாங்கிய விவகாரம் சீனாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகத்தின் இணை இயக்குநருக்கு $62,800 லஞ்சம் கொடுத்த ஆடவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.