சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய சென்னையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சாலைகளை அமைப்பதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 1,900 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக மாநில அரசு முன்பு அறிவித்திருந்தது. இதனால் விவசாய நிலங்கள் அழிந்துபோவதாகக் கூறும் விவசாயிகள் சிலர், திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதால் அதனை ரத்து செய்ய உத்தரவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன், போலிஸ் அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் நிலத்தை ஒப்படைக்க விவசாயிகளுக்கு நெருக்குதல் அளித்து வந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மக்களின் உணர்வை மதியாமல் தமிழக அரசு நடந்துகொண்டதாக நீதிமன்றம் கண்டித்தது.