ஆம்பூர்: பொதுமக்களின் கவ னத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது ஆம்பூரில் பிறந்துள்ள அதிசய குணாதிசயம் கொண்ட பசுங்கன்று ஒன்று.
பாய், தலையணையில் மட்டுமே படுத்துறங்கும் ஆச்சரியமூட்டும் குணங்கொண்ட அதிசய கன்றுக் குட்டியாகும் இது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்.
இவர் தனது வீட்டில் கால் நடைகள் வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கறவை மாடு ஒன்று வாங்கி வந்து வளர்த்து வந்தார்.
அந்தப் பசு அண்மையில் ஆண் கன்று ஒன்றை ஈன்றது. பிறந்த சில நாட்களிலேயே அது சராசரி பசுங்கன்று போலில்லாமல் மனிதர்களோடு பழக ஆரம்பித்தது.
மாட்டுத் தொழுவத்தில் தாய் பசுவோடு இருக்காமல் வீட்டிற்குள் புகுந்து தலையணை, பாய் போடப் பட்ட இடத்திற்குச் சென்று படுத்து உறங்குவது, தண்ணீர் அருந்துவது போன்ற செயல்களைச் செய்து வருகிறது.
மேலும், வீட்டில் குழந்தைக ளுக்கு வாங்கி வரும் தின்பண் டங்களை வாங்கி உண்கிறது. இந்தப் பசுங்கன்று இருக்கும் அறையில் மின்விசிறி, மின் விளக்கு, பாட்டுக் கேட்க ஒலிப் பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாட்டுக் கேட்டால் உற்சாகமாய் நடனமாடுவது என்று எல்லாரை யும் கவர்ந்து வருகிறது. தன் பசிக்குத் தாய் பசுவிடம் பால் அருந்த மட்டுமே இந்தக் கன்று தொழுவத்திற்குச் செல்கிறது.
இந்த அதிசய இளங்கன்றுக்கு 'வேலவன்' எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மனிதர்களைப் போல் குணம் கொண்ட இந்த வேலவனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.