கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகளை விற்பனை செய்தது தொடர் பாக கொல்லிமலைப் பகுதியில் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து 2ஆம் நாளாக நேற்று விசாரணை நடத்தினர்.
குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவ அவசர வாகனம் ஓட்டுநர் முருகேசன், தரகர் களாக செயல்பட்டவர்கள் என 12 பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ராசிபுரம், கொல்லிமலைச் சுற்றுவட்டாரத் தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 குழந்தைகள் மாயமான தகவலும் தெரியவந்தது.
அத்துடன் குழந்தைகள் விற் பனை செய்யப்பட்டது தொடர்பாக இன்னும் பலர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது.