சென்னை: தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான திருஆரூரான் சர்க்கரை ஆலைக் குழு மத்தின் தலைவர் தியாகராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
சுமார் 1,500 கரும்பு விவசாயிகளை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கையெழுத் துப் பெற்று இந்திய வங்கிகளில் ரூ.100 கோடி அளவுக்குக் கடன் வாங்கி தியாக ராஜன் பெரும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இவர், விவசாயிகளிடமிருந்து வாங்கிய கரும்புக்கு ரூ.500 கோடிக்கும் அதிக மாக அவர் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் ஆனால் இன்றுவரை பல விவ சாயிகளைத் தொடர்ந்து ஏமாற்றி வரு கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தியாகராஜன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஸ்டாலின் என் பவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலிசார் அவரைக் கைது செய்து இருப்ப தாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
மோசடி, ஏமாற்றுதல், போலியாக ஆவ ணங்களைத் தயாரித்து ஏமாற்றுதல் உள் ளிட்ட பல பிரிவுகளின்கீழ் தியாகராஜன் மீது வழக்குப் பதியப்பட்டு இருப்பதாகவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
தியாகராஜன், 1954ஆம் ஆண்டு முதல் சர்க்கரை ஆலைத் தொழிலில் இருந்து வருகிறார். இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவராக இவர் மூன்று முறை பதவி வகித்தவர்.
திருஆரூரான் குழுமத்திற்கு கடலூர் மாவட்டம் இறையூர், கும்பகோணத்தை அடுத்த திருமண்டகுடி, கோட்டூர், ஏ. சித்தூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் இயங்கிவருகின்றன.