பதினாறு வயதும் பதராகும் பொழுதும்’ என்ற தலைப்பில் ‘நமது அம்மா’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சினிமாவில் ரஜினியோடு போட்டி போட்டு தோற்றுவிட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்துவிட கணக்கு போடுகிறார்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த இதழில் “இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆன்மிக அரசியல் தொடங்கி 234 தொகுதிகளில் தனியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்த ரஜினி, ஆன்மிகத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறோம் என்பதற்கு சமம்,” என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“கமலோடு கூட்டு வைத்துக்கொண்டு அரசியலில் ஜெயிப்பேன் என்பது, வெந்த நெல்லை முளைக்க வைக்க முயலும் காரியம் என்பதை காலம் ரஜினிக்கு கற்பிக்கத்தான் போகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ரஜினியின் கதாநாயகன் பீடத்தை தகர்த்தெறிய நேரம் பார்த்து கமல் காத்திருக்கும் வேளையில், ரஜினியே அந்த வாய்ப்பை வலியச் சென்று வழங்குகிறார் என்றால் சும்மாவா விடுவார் உத்தம வில்லன்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity