காவலர் வில்சன் கொலை; துப்பு கொடுத்தால் ரூ.7 லட்சம் வெகுமதி

கன்னியாகுமரி: போலிஸ் அதிகாரி வில்சன் என்பவர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவரால் கொல்லப்பட்டார். அவர்களது அடையாளம் இப்போது தெரிந்துள்ள நிலையில் அவர்களது இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.7 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார்.

வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோர் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தாக காவல்துறையினர் அறிவித் துள்ள நிலையில் கொலையாளி களைப் போலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் களியக்காவிளையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!