ஸ்ரீவில்லிபுத்துார் பத்திரகாளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்களால் கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரியன்று 88 வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து அதை பிரசாதமாக விநியோகித்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த வெள்ளியன்று நள்ளிரவு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சியை முத்தம் மாள் 88, கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன், உள்ளிட்டோர் துவக்கினர். விறகு அடுப்பில் நெய்யை கொதிக்க விட்டு வெல்லம், அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை அதில் போட்டு வேக விட்டு, அவற்றை கரண்டிகள் எதையும் பயன்படுத்தா மல் வெறும் கையால் எடுத்து பனையோலைப் பெட்டியில் சேகரித்த போது பக்தர்கள் குலவையிட்டு வணங்கினர். படம்: ஊடகம்
இந்த அப்பங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.