நாகர்கோவில்: கள்ளநோட்டுக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட மணிகண்டன் கைதான நிலையில் போலிசாரிடம் விசாரணையின்போது அளித்துள்ள வாக்குமூலத்தில், “எம்பிஏ படித்துள்ள நிலையில் உரிய வேலை கிடைக்கவில்லை. வெளிநாடு சென்று வந்தபின் கடனில் மூழ்கியதால் தலையே சுற்றியது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வேறு வழியின்றி கள்ளநோட்டை அச்சடிக்கத் தொடங்கினேன்,” என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள மதுக்கடை ஒன்றில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட சந்தோஷ்குமார் என்ற ஆடவர் பிடிபட்டபோது, நாகர்கோவில் அருகே புத்தேரியைச் சேர்ந்த கள்ளநோட்டுக் கும்பல் தலைவன் மணிகண்டன் கைதானார்.