சென்னைகன: தீபாவும் தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என தாங்கள் இரு தினங்களுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பை திருத்தம் செய்து மீண்டும் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சென்னை
போயஸ் கார்டன் இல்லம் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப் புள்ள சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வலியுறுத்தி அதிமுக நிர்வாகி புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் மகன் தீபக் கும் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை கடந்த 27ஆம் தேதி விசாரித்து நீதிபதிகள் , தீபா, தீபக்கை
இரண்டாம் நிலை வாரிசுகள் என்று கூறினார்.
இந்த நிலையில், இந்து வாரிசு முறைச் சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை திருத்தம் செய்யவேண்டும் என்றும் சென்னைஐகோர்ட்டில் தீபாவும், தீபக்கும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.