சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்.
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும்.
“தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
“இது இன்று ஜூன் 2ல் புயலாக வலுவடைந்து மேற்குக் கடற் கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
“இதன் காரணமாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரளக் கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளிக் காற்று வீசக்கூடும்,” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.