மதுரை: கீழடியில் மட்டும் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் தற்போது மேலும் சில இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கீழடி சார்ந்த 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.
கடந்த 23ம் தேதி முதல் மணலூரில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் உலையானது அணிகலன்களை வடிவமைப்பதிலும், உலோகம் தயாரிக்கவும் பயன்பட்டுள்ளதா என இனிவரும் நாட்களில் முழுமையாக தெரியவரும் என்றார். கீழடியில் அகழாய்வுப் பணிகள் நீடிக்கின்றன.