தமிழகத்தில் ஒருபக்கம் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் இத்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா கிருமிப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் எங்கும் செவ்வாய் கிழமையுடன் 24 மணி நேரத்தில் புதிதாக 3,943 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.
கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் 38,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இக்கிருமித் தாக்குதலுக்கு இதுவரை தமிழகத்தில் 1,201 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவத்துறை யினரின் அர்ப்பணிப்பால் மாநிலம் முழுதும் கொவிட்-19 கிருமி பாதிப்பில் இருந்து 50,074 பேர் மீண்டுள்ளனர். சென்னையில் மட்டும் இத்ெதாற்றில் இருந்து 34,828 பேர் குணமடைந்துள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online