சென்னை: தமிழகம் முழுவதும் எந்த ஒரு தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட உள்ளது.
வாரஇறுதியான ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு ஏராளமான மக்கள் திரள்வர். இதுபோல் கூட்டம் கூடுவதைத் தடுக்கவே ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த உத்தரவால் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா தொற்றின் வேகம் இப்போது சற்றே தணியத் தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
“கடந்த மாதம் போலவே இந்த ஆகஸ்ட் மாதத்திலும் நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத ஊரடங்கு அமல் படுத்தப்படும்,” என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி, இன்று மாநிலம் எங்கும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி, மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்லாமல் முழு ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அரசு ேகட்டுக் கொண்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது.
“மீன் வாங்கிவிட்டு உடனே திரும்பிச் செல்ல வேண்டும், வியாபாரிகளுக்கு மட்டுமே இங்கு அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதியில்லை,” என அறிவுறுத்தப்பட்டது.
காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு கூட்டம் சேராமல் தடுக்க முற்பட்டனர். பொதுமக்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதை வாயை, மூக்கை முழுமையாக மூடும் அளவுக்கு பயன்படுத்தவில்லை என்பதையும் காணமுடிந்தது. சமூக இடைவெளியும் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தது.
இதேபோல், இதர இடங்களில் உள்ள மளிகை, காய்கறி கடை களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணமுடிந்தது.
இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேடு மீன் சந்தையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். ஆனால், சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டிருந்தது.
படம்: ஊடகம்