சென்னை: சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 4 இலக்கத்தில் இருந்து 3 இலக்கமாகக் குறையும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா வுக்கு அடுத்தபடியாக கொரோனா கிருமி பாதிப்பில் தமிழகம் இரண் டாம் இடத்தில் உள்ளது. இதில் சென்னை மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் தற்போது பாதிப்படைவோர் எண் ணிக்கை தொடர்ந்து 1,400க்கும் குறைவாகவே உள்ளது.
மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டிருந்த 5,881 பேரில் 1,013 பேர் சென்னை யைச் சேர்ந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து சென்னையில் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 99,794 ஆக உயர்ந்துள்ளது.இத்தொற்று சென்னையில் ஒரு லட்சத்தை தொட உள்ளது.
சென்னையில் 1,013 ஆக உள்ள இந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறியுள்ளன.
தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, “வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 5,881 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களையும் சேர்த்து 245,859 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
“இதுவரை 1,83,956 பேர் குணமாகி உள்ளனர். 3,935 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 57,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
“சென்னையில் 99,974 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, அதில் 2,110 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 84,916 பேர் குணம் அடைந்து தற்போது 12,768 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
“சென்னையில் இம்மாதத் தொடக்கத்தில் தினமும் இப் பாதிப்பு எண்ணிக்கை 2,400 வரை இருந்தது. அதன்பிறகு குணமடைந்தோர் எண்ணிக்கை 60% லிருந்து 85% ஆக உயர்ந்தது. பாதிப்படைந்தோர் விகிதமும் 12.7% ஆக குறைந்தது.
“சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் பாதிப்பு 10% குறைந்துள்ளது. இதேபோல் ஆறு மண்டலங்களில் குணமடைவோர் 85% ஆக அதிகரித்துள்ளனர். முன்பு சோதனை, பாதிப்பு விகிதம் 9% ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 5% ஆக குறைய வாய்ப்புள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் இத்தொற்றில் இருந்து மக்கள் குணமடைந்து வருவது நிம்மதியைத் தந்துள்ளது.