தமிழக ஆளுநருக்கு கொவிட்-19; வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்து

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆளிநர் மாளிகையில் பணிபுரியும் 85க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

ஆளுநரின் நேரடி உதவியாளருக்கும் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா பரிசோதனைக்குச் சென்ற ஆளுநர் புரோகித்துக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் அதிகம் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த 7 நாட்களாக அவர் வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தனர்; அங்கு கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 251,738 ஆக அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!