தேனி: கொரோனா பாதிப்புடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு உதவிகள் எதுவும் கிடைக்காததால், மகனே தனது தாயின் உடலை வாடகைத் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்றுள்ள அவலம் நடந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலை, எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், மக்கள் வசிக்கும் முக்கிய வீதிகள் வழியாக தள்ளுவண்டியில் தள்ளிச்சென்றதால் கூடலூர் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த சின்னம்மாள் என்ற 80 வயது மூதாட்டி, வயிற்றுப்போக்கின் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோத னையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர், உடல்நலம் குன்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த கூடலூர் நகராட்சி சுகாதாரத் துறை யினர், உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், 12 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அதிருப்தி யடைந்த அப்பகுதி மக்கள், உடலை உடனே மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு சின்னம்மாளின் மக னுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இடுகாட்டிற்கு தாயின் உடலை
எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வராததால்,
வாடகைத் தள்ளுவண்டி யில் தள்ளிச் செல்லும் மகன்.
படம்: ஊடகம்