சென்னை செல்வோரை உடனே தனிமைப்படுத்த உத்தரவு

சென்னை செல்வோரை உடனே தனிமைப்படுத்த உத்தரவு

1 mins read
24ee0ca7-2ac4-4de0-b1c0-b1b5bea5b68e
சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லக் காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். படம்: ஏஎப்பி, அருண் சங்கர் -

சென்னை: சென்­னை­யில் கொவிட்-19 தொற்று படிப்­ப­டி­யாகக் குறைந்து வந்­தது. ஆனால் கடந்த நான்கு நாட்­களில் தொற்று மீண்­டும் கூடி வரு­கிறது.

தலை­ந­க­ரில் ஏறக்­கு­றைய இரண்டு மாத காலத்­தில் முதன்­மு­த­லாக ஆகஸ்ட் மாதத்­தின் இரண்­டா­வது வாரத்­தில் அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை 1,000க்கும் குறை­வாக இருந்­தது.

ஆனால் கடந்த சில நாட்­களில் நாள்­தோ­றும் புதி­தாக பாதிக்­கப்­படு­வோ­ரின் எண்­ணிக்கை 1,200ஐ தொட்­டு­விட்­டது. கிருமி தொற்றி இருப்­போ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யும் கூடி வரு­கிறது.

இந்நிலை­யில், நகரின் மேற்கு மற்­றும் தெற்கு மண்­ட­லங்­களில் கொவிட்-19 பரி­சோ­த­னை­களைத் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது.

இ-பாஸ் எனப்­படும் அனு­மதி தளர்த்­தப்­பட்டு இருப்­ப­தால் சென்­னைக்கு வரு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால் தலை­ந­க­ருக்கு வரு­வோரை உட­னடி­யா­கத் தனி­மைப்­ப­டுத்தி கண்­கா­ணிக்­கும் நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி அதி­கா­ரி­கள் களப்­ப­ணி­யா­ளர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பித்து இருக்­கி­றார்­கள்.

இ-பாஸ் விதி­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து கடந்த சில நாட்­களில் அன்­றா­டம் சுமார் 20,000 பேர் சென்னை செல்ல அனு­மதி பெறு­வதாகத் தெரிகிறது.

தொழிற்­சாலை, அலு­வ­லகம் செல்­வோர், வியா­பா­ரம் நிமித்­தம் செல்­ப­வர்­கள் போன்ற பல­ரை­யும் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கும்­படி அறி­வு­றுத்­தப்­பட்டு இருக்­கிறது.

சென்­னை­யில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்டு உள்ள இடங்­களில் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் போன்ற விதி­களை மக்­கள் கடு­மை­யா­கப் பின்­பற்­று­கி­றார்­கள் என்­பதை அதி­கா­ரி­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் உத்­த­ரவிடப்பட்டது.