அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்.
கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல்ஹாசன் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.
திமுகவின் வாகை சந்திரசேகர் வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.