லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் சிங்கோலி தகா என்ற கிராமத்தில் வீடு ஒன்றின் வெளியே ராஜ்குமார் என்பவரது கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அருகில் விளையாடிக்கொண்டு இருந்த ஐந்து சிறுவர்கள் அந்த காருக்குள் சென்று அங்கும் விளையாடினர். அப்போது காரின் கதவுகள் தானியக்க முறையில் திடீரென்று மூடிக்கொண்டன. அதனால் காருக்குள் சிக்கிய சிறுவர்கள் ஐவரும் வெளியே வரமுடியாமல் திண்டாடினர். 4 மணிநேரத்திற்கும் மேல் காருக்குள் சிக்கிய அவர்களில் 4 சிறுவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டனர். ஒரு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.