சென்னை: கொரோனா கிருமிப் பரவலை ஒழிக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஐபிஎல் டி20 தொடரில் உள்ள எட்டு அணிகளின் வீரர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தமிழகத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளதாக அந்த அணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத், சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இந்த செறிவூட்டிகளை வழங்கினர்.