இளையான்குடி: தேவகோட்டை அருகே 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தாய் மீண்டும் கிடைத்ததால் அவரது மகன்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை தாலுகா கல்லடியேந்தலைச் சேர்ந்த வெள்ளைக்கண்ணுவின் மனைவி பழனியம்மாள், 75, (படம்) சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார்.
அவரது மகன்கள் துரைராஜ், தமிழ்ச்செல்வம், சௌந்திரராஜன் ஆகியோர் பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால், தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன பழனியம்மாள் திருவனந்தபுரம் அருகே வெஞ்சரமூடு என்ற இடத்தில் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன் சுயநினைவு திரும்பியவர் தன் பெயர் பழனியம்மாள் என்றும் சொந்த ஊர் இளையான்குடி அருகே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்ல நிர்வாகிகள் தேவகோட்டை தாசில்தார் ராஜ ரத்தினத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர், பழனியம்மாளின் மகன் தமிழ்ச்செல்வத்திடம் அவரது தாய் உயிரோடு இருக்கும் விவரத்தைக் கூறினார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பழனியம்மாள் அவரது மூன்றா வது மகன் சௌந்திரராஜனுடன் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ளார்.