10,000 பள்ளிகளை மூடப்போவதாக அறிவிப்பு

2 mins read
17e29099-0402-4aa1-b3b6-0f7f59cb9041
பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

ஓசூர்: கொவிட்-19 கிரு­மிப் பரவல் காரணமாக கல்வி நிலை­யங்­கள் கடந்த ஓராண்­டிற்­கும் மேலாக மூடப்­பட்­டுள்­ளன. இதனால், பாலர் பள்ளிகள், தொடக்­கப்பள்ளி­கள் வருவாயின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளன.

இதன்­கா­ர­ண­மாக, 10,000 பள்ளி கள் மூடப்பட உள்­ள­தாக அதிர்ச்சித் தகவல் வெளி­யாகியுள்­ளது.

"மாநி­லத்­தில் ஏறக்குறைய 10,000 பாலர், தொடக்­கப்பள்­ளி­களின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்­ள நிலையில், அவற்றை மூடும் சூழ­லுக்­குத் தள்­ளப்­பட்­டுள்ளோம்," என தமி­ழக பாலர், தொடக்­க, மெட்­ரி­கு­லே­ஷன் பள்­ளி­கள் சங்க மாநி­லப் பொதுச் செய­லர் நந்­த­குமார் கூறி­யுள்­ளார்.

ஓசூ­ரில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் செயல்படும் 10,000 பள்ளிகளில் பெரும்பாலானவை வாடகைக் கட்­ட­டத்­தில் இயங்கி வரு­வதால் மின் கட்­ட­ணம், சொத்துவரியைச் ெசலுத் தும் தேவை உள்ளது.

"கொரோனா காலம் என்­ப­தால் கடந்த 2019 முதல் கல்விக் கட்­ட­ணங்­கள் முறையாகச் செலுத்தப் படாமல் நிலு­வை­யில் உள்­ள­தால், வரி­களைக் கட்டமுடி­யாத சூழலும் நில­வு­கிறது.

"பெற்­றோ­ரி­டம் 75% கல்விக் கட்­ட­ணங்­களை வசூலிக்கலாம் என சென்னை உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கிய பிறகும் 25% பள்­ளி­கள் கூட அந்த 75% கட்ட­ணங்­களைப் பெறவில்லை.

"இத­னால், ஐந்து லட்­சத்­துக்­கும் அதி­க­மான ஆசி­ரி­யர்­கள், பணி யாளர்­கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்­ளி­களை நடத்­து­வ­தற்கு வாங்­கிய கடனைக் கட்டமுடி­யா­த நிலை யில், 10,000 பள்­ளி­களையும் மூடி விட முடிவு செய்­துள்­ளோம்.

"எனவே, எங்­கள் பள்­ளி­க­ளை­யும் 50 லட்­சத்­துக்­கும் மேலான மாண­வர்­க­ளை­யும் தமிழக அரசே எடுத்துக்கொள்­ளட்­டும். பள்­ளி­களை மூடு­வதைத் தவிர எங்­க­ளுக்கு வேறு வழி தெரி­ய­வில்லை," என்று நந்­த­குமார் கூறி­னார்.