சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மேற்கு, கிழக்கு வட்டார ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க மாநிலச் செயலாளர் நடராஜன் செய்தியாளர்
களிடம் கூறுகையில், "2014ஆம் ஆண்டு அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலர் என விற்கப்பட்டபோது ஒரு லிட்டர் பெட்ரோல் 71.51 ரூபாயாக இருந்தது.
"தற்போது பீப்பாய் எண்ணெய் விலை 70 டாலராகக் குறைந்த நிலையில் பெட்ரோல் விலை 103 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
"பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தியதே இந்த விலை ஏற்றத்திற்குக் காரணம்.
"காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடத்தியபோது வசூலிக்கப்பட்ட கலால் வரி ரூ.74,000 கோடி.
"ஏழு ஆண்டுகளில் இது ஏறக்குறைய 456 விழுக்காடு உயர்ந்து தற்போது 3 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
"எனவே அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்கவிடாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம்," என்றார்.