சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் அருகே இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்டு இருந்த ஒரு லாரி சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வேகமாக வந்த ஒரு கார் அந்த லாரி மீது மோதியதில் காரில் இருந்த ஐந்து பொறியியல் பட்டதாரி மாணவர்களும் அதே இடத்தில் பலியாயினர்.
அப்பளம் போல் நொறுங்கிய காரைத் துண்டித்து உடல்களை மீட்டதாகவும் பலியானவர்கள் புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, மேட்டூரைச் சேர்ந்தவர்கள் என்றும் படச்சாதன காட்சிகளின் உதவியுடன் புலன்விசாரணை நடப்பதாகவும் புலனாய்வுப் பிரிவு போலிஸ் கூறியது. படம்: தி இந்து