தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் 1991ல் நடந்த தற்கொலை தாக்குதலில் முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த பிரதீப் வி. பிலிப் என்ற போலிஸ் அதிகாரி, பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்டுகள் சேவையாற்றி மூத்த போலிஸ் அதிகாரியாக கடந்த வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.
டிஜிபி சைலேந்திர பாபு (இடது), தமிழக போலிஸ் பயிற்சிப் பயிலகத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி பிரதீப் வி. பிலிப்பை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தார்.
படம்: தமிழக ஊடகம்