சென்னை: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வியாழக்கிழமை காலை தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றார்.
அங்கு அவருடைய பையை சோதனையிட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை ஊழியர் பையில் இரண்டு மடிக்கணினிகள் இருந்ததைக் கண்டார்.
எந்தவொரு பயணியும் இரண்டு மடிக்கணினிகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அந்த ஊழியர் கூறியதை அடுத்து அமைச்சருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விமானப் பயணிகள் இரண்டு மடிக்கணினிகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறும் விதிமுறைகள் எதுவும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
அதனையடுத்து அமைச்சருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இது பற்றி கருத்து கூறிய சென்னை விமான நிலைய பேச்சாளர், தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் உடனடியாக அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.