மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் அக்டோபர் 2ஆம் ேததி நாடெங்கும் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் புகைப்படக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைத்தாா். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்தக் கண்காட்சியை அவா் சனிக்கிழமை அன்று தொடங்கி வைத்தாா். ஐந்து நாள்கள் வரை இந்த கண்காட்சியை மக்கள் பாா்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, சென்னையில் உள்ள காந்தி நினைவிடத்தில், மகாத்மா காந்தியுடன் மற்ற சுதந்திரப் போராட்ட வீரா்கள் உள்ள கண்காட்சியையும் ஆளுநா் பாா்வையிட்டாா். பார்வையாளர்களும் அந்தக் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.
படம்: இபிஏ