சென்னை: உள்ளாட்சித் தேர்தலின் போது சரியாகப் பணியாற்றவில்லை என்று எழுந்த புகாரின் பேரில் அதிமுகவில் இருந்து எட்டு நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
எட்டு பேரும் உட்கட்சிப் பூசலில் ஈடுபட்டதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
"எட்டு பேரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது," என அதிமுக தலைமை கூறியுள்ளது.
உட்கட்சிப் பூசலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிக்கை வழி எச்சரித்துள்ளனர்.