அமைதியான முறையில் 78.47% வாக்களிப்பு

விழுப்­பு­ரம்: தமி­ழ­கத்­தில் இரண்­டாம் கட்­ட­மாக ஒன்­பது மாவட்­டங்­களில் நடந்து முடிந்­துள்ள ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல் எந்த ஓர் அசம்­பா­வி­த­மும் இன்றி அமைதியான முறை­யில் நடந்து முடிந்­துள்ளதாக­வும் 78.47% வாக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ள­தா­க­வும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

அதி­க­பட்­ச­மாக விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் 85.31% வாக்­கு­களும் குறைந்­த­பட்­ச­மாக காஞ்சிபுரத்தில் 72.33% வாக்­கு­களும் பதி­வாகி உள்­ள­தா­க­வும் அது கூறி­யுள்­ளது.

கடந்த 6ஆம் தேதி நடை­பெற்ற முதற்­கட்ட தேர்­த­லில் 77.43% வாக்­கு­கள் பதி­வா­கி­யி­ருந்த நிலை யில் முதற்­கட்ட, இரண்­டாம் கட்ட தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் நாளை அக்­டோ­பர் 12ஆம் தேதி எண்­ணப்­பட உள்­ளன.

இதற்­கி­டையே, வாக்­குச் சுத்­தம் சொல்­லி­லும் இல்லை செய­லி­லும் இல்லை என மக்­கள் நீதி மையம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன் தனது டுவிட்­டர் பதி­வில் தெரி வித்­துள்­ளார்.

அய்­யப்­பன்­தாங்­க­லில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்­குப்­பதிவில் ஸ்ரீதேவி என்­ப­வ­ரின் வாக்கு கள்ள வாக்காக ஏற்கெ­னவே பதி­வானதாக குறிப்­பிட்­டுள்­ள­வர், மநீம வேட்­பா­ளர் அர­விந்த் கிருஷ்ணாவின் போராட்­டத்­திற்­குப் பிறகே ஸ்ரீதே­விக்கு 'சேலஞ்ச்' வாக்­க­ளிக்க வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தாகத் தெரிவித்­துள்ளார்.

தமி­ழ­கத்­தில் காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, விழுப்­பு­ரம், கள்­ளக்­கு­றிச்சி, திரு­நெல்­வேலி, தென்­காசி ஆகிய ஒன்­பது மாவட்­டங்­க­ளி­லும் அக்­டோ­பர் 6, 9 ஆகிய இரு தேதி­களில் ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல் இரு கட்டமாக நடை­பெற்­றது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!