ஜெயலலிதா சமாதியில் சசிகலா கண்ணீர் அஞ்சலி

சென்னை: சென்னை மெரினா கடற்­க­ரை­யில் அமைந்­துள்ள தனது ஆரு­யிர் தோழி ஜெய­ல­லி­தா­வின் நினை­வி­டத்­துக்­குச் சென்று மலர்­களை வைத்து கரம்­கூப்பி மரி­யாதை செய்து, கண்­ணீர்­மல்க சசி­கலா அஞ்­சலி செலுத்­தி­னார்.

தொடர்ந்து எம்­ஜி­ஆர், அண்ணா சமா­தி­க­ளுக்­கும் சென்று அவர் மாலை அணி­வித்­தார்.

அங்­கி­ருந்த ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் பேசிய சசி­கலா, "அதி­மு­கவை எம்­ஜி­ஆ­ரும் ஜெய­ல­லி­தா­வும் காப்­பாற்­று­வார்­கள். கட்­சிக்கு நல்ல எதிர்­கா­லம் உள்­ளது," என்று சொன்­னார்.

இத­னைத்­தொ­டர்ந்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சசி­கலா, "கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக என் மன­தில் தேக்கி வைத்­தி­ருந்த பாரத்தை இப்­போ­து­தான் ஜெய­ல­லிதா நினை­வி­டத்­தில் இறக்கி வைத்­துள்­ளேன்.

"கழ­கத்தை அம்மா காப்­பாற்­று­வார் என்ற நம்­பிக்­கை­யோடு இங்­கி­ருந்து செல்­கி­றேன். என் வய­தில் முக்­கால் பகுதி காலத்தை அம்­மா­வு­டன் நான் வாழ்ந்­துள்­ளேன்.

"தலை­வ­ரும் அம்­மா­வும் தொண்­டர்­க­ளுக்­கா­கவே, தமி­ழக மக்­க­ளுக்­கா­கவே வாழ்ந்­த­வர்­கள். அவர்­கள் அதி­மு­கவைக் காப்­பாற்றுவார் ­கள்," என்று கூறினார்.

ஏறத்­தாழ நான்கு ஆண்­டு­கள் ஏழு மாதங்­க­ளுக்­குப் பிறகு ஜெய ­ல­லிதா நினை­வி­டத்­துக்கு வந்­தி­ருந்த வி.கே.சசி­க­லாவை வர­வேற்க அவரது ஆத­ர­வா­ளர்­கள் மெரி­னா­வில் குவிந்­தி­ருந்­தனர்.

மக்­கள் கூட்­டத்­தைக் கட்­டுப் படுத்த காவல்­து­றை­யி­ன­ரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே, இன்று அதி­முக வின் பொன்­விழா ஆண்டை மிகச் சிறப்­பா­கக் கொண்­டாட உள்­ள­தாக அதி­மு­க­வின் இரட்­டைத் தலைமை அறி­வித்துள்­ளது.

மறைந்த முன்­னாள் முதல்­வர் எம்­ஜி­ஆ­ரால் உரு­வாக்­கப்­பட்ட அதி­முக, 49 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று 17ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 50வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கிறது.

இந்­நாளை பொன்­வி­ழா­வா­கக் கொண்­டா­டும் வகை­யில் பிரம்­மாண்ட மாநாடு நடத்­தப்­பட உள்ளதால், மெரினா கடற்­க­ரை­யில் 3,000 போலி­சார் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இப்போது தான் இறக்கி வைத்துள்ளேன்.



வி.கே. சசிகலா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!