சென்னை: சேலத்தில் பிரம்மாண்ட மான மாளிகை போன்ற வீடு ஒன்றை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் இளங் கோவன் கட்டி வருகிறார்.
இந்தத் தகவல் லஞ்ச ஒழிப்புப் போலிசாருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர்கள் ரகசிய விசா ரணை நடத்தினர்.
அப்ேபாது, இளங்கோவன் வரு மானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததைக் கண்டுபிடித்தனர்.
புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டால் இளங்கோவன் வசமாக சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் தங்களது சோதனை நடவடிக்கைகளை நேற்று காலை முதல் முடுக்கி விட்டனர்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத் தலைவரும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளருமான இளங்கோவனுக்குச் சொந்த மான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் சோதனைகளைத் தொடர்ந்தனர்.
வாழப்பாடியை அடுத்த புத்திர கவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது அங்கு ஏராளமான கட்சித் தொண்டர்களும் குவிந்திருந்தனர்.
இளங்கோவன் முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு ரூ.30 லட்சமாக இருந்த இளங்கோவனின் சொத்து மதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.5.6 கோடியாக அதிகரித்தது. அதாவது ரூ.3.78 கோடி அளவிற்கு 131% வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளங்கோவன் பண மதிப்பிழப்பின் போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.600 கோடியை பணம் பரிமாற்றம் செய்ததாகவும் சட்டமன்றத் தேர்தலின்போது ரூ.1,000 கோடியை இதன்மூலம் செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இளங்கோவன், அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர், நண்பர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் போலிசார் நேற்று சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சோதனை நடந்தது. இதேபோல், நேற்றும் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகனின் வீடு உள்பட நான்கு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.