19 மாதங்களாக மூடிக்கிடந்த 32,000 பள்ளிகள் திறப்பு

சிவ­கங்கை: தமி­ழ­கத்­தில் கடந்த 19 மாதங்­க­ளாக மூடிக்­கி­டந்த ஏறக்­கு­றைய 32,000 தொடக்க, நடு நிலைப்­பள்­ளி­கள் நேற்று திறக்­கப் பட்­டன.

பள்­ளிக்கு வருகை தரும் முத­லாம் வகுப்பு முதல் எட்­டாம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­களை ஒரு விருந்­தி­ன­ரைப் போல் முக­ம­லர்ச்சி­யு­டன் வர­வேற்­கும்­படி முன்­ன­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் எம்­எல்­ஏக்­கள், எம்­பிக்­கள் உள்­ளிட்­டோரை அறி­வு­றுத்தி இருந்­தார்.

இந்­நி­லை­யில், மாநி­லம் முழு வதும் உள்ள பள்­ளி­களில் வித்­தி­யா­ச­மான முறை­யில் மாண­வர்­க­ளுக்கு வர­வேற்பு அளித்­துள்­ள­னர்.

ரோஜா மலர்க்­கொத்து, இனிப்­பு­கள், பேண்ட் வாத்­தி­யம்; மேள­தா­ளம் முழங்க, கிரீ­டங்­கள், மலர் மாலை­கள் சூட்டி மாண­வர்­கள் வித­வி­த­மாக பள்­ளிக்கு வர­வேற்­கப்­பட்­டுள்­ள­னர்.

சிவ­கங்கை மாவட்­டம், குன்­றக்­குடி அர­சுத் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களை வர­வேற்க குன்­றக்­குடி முரு­கன் கோவில் யானை சுப்­பு­லட்­சு­மியை அழைத்து வந்து மாண­வர்­க­ளுக்கு பூங்­கொத்து கொடுத்து வர­வேற்­றுள்­ள­னர்.

முது­கு­ளத்­தூர் அருகே கர­காட்­டம், தப்­பாட்­டம், பொய்க்­கால் குதிரை ஆட்­டங்­கள் ஆடி மாண­வர்­க­ளுக்கு மாலை அணி­வித்து, ஆரத்தி எடுத்து உற்­சாக வர­வேற்பு அளித்த தலைமை ஆசி­ரி­யர் கலை முரு­க­னின் செய­லும் பல­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தி­ருந்­தது.

ஆறு மாவட்­டங்­களில் விடுமுறை

திரு­வா­ரூர், நெல்லை, விழுப்­பு­ரம், கட­லூர், வேலூர், கள்­ளக்­குறிச்சி ஆகிய ஆறு மாவட்­டங்­க­ளி­லும் உள்ள பள்­ளி­க­ளுக்கு கன­மழை கார­ண­மாக நேற்று விடு­முறை அறி­விக்­கப்­பட்­டது.

கொரோனா பர­வல் கார­ண­மாக கடந்த ஒன்­றரை ஆண்­டுக்­கும் மேலாக மூடப்­பட்­டுக் கிடந்த பள்ளி கள், நேற்று தொடங்­கப்­பட்ட நாளி­லேயே விடு­முறை அளிக்கப்­பட்­ட­தால் மாண­வர்­களும் பெற்­றோ­ரும் வருத்­த­முற்­ற­னர்.

ஆரஞ்சு, சிவப்பு நிற எச்­ச­ரிக்கை

டெல்டா மாவட்­டங்­கள் உட்­பட ஒன்­பது மாவட்­டங்­களில் தீபா­வளி வரை மித­மான கன­மழை பெய்­யும் எனக் கூறி­யுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இம்­மா­வட்­டங்­க­ளுங்கு ஆரஞ்சு நிற எச்­ச­ரிக்­கை­யும் விடுத்­துள்­ளது.

இதற்­கிை­டயே, கன்­னி­யா­கு­ம­ரி­மா­வட்­டத்­தில் மழை அதி­க­மாக பெய்து வரு­வ­தால் அங்­குள்ள தாமி­ர­ப­ரணி, குழித்­துறை, பழை­யாறு, வள்­ளி­யாறு ஆகி­ய­வற்­றில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் கரை­யோர மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் சிவப்பு எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!